கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ₹25 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்

திருச்செங்கோடு, மார்ச் 20: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ₹25 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம் போனது. திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி, எள் ஏலம் நடைபெற்றது. சின்னசேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் எள் ரகங்களைக் கொண்டு வந்தனர். ஆக மொத்தம் 205 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இவற்றை வாங்க பவானி, அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த வியாபாரிகள் குவிந்தனர்.

கருப்பு எள் ரகம் கிலோ ₹121.90லிருந்து ₹140.10 வரை விற்பனையானது. வெள்ளை ரகம் ₹114.90 முதல் ₹123.90 வரையும், சிவப்பு ரக எள் ₹112.90 முதல் ₹116.90 வரையும் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ₹21.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. பருத்தியை பொருத்தமட்டில் பிடி ரகம் குவிண்டால் ₹5050 முதல் ₹5798 வரை விற்பனை ஆனது. 220 மூட்டை பருத்தி ₹3.50 லட்சத்திற்கு ஏலம் போனது. ஆகமொத்தம் எள் மற்றும் பருத்தி ₹25 லட்சத்திற்கு ஏலம் விடப்ப்டது.

Related Stories: