திருத்துறைப்பூண்டி, மார்ச்20: திருத்துறைப்பூண்டி பகுதியில் 25ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என உதவி இயக்குனர் ஜான்சன் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் 16வது சுற்று கோமாரி நோய்தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை கால்நடை பராமரிப்பு துறை மன்னார்குடி கோட்ட உதவிஇயக்குநர் ஜான்சன் சார்லஸ் நேற்று திருத்துறைப்பூண்டி பகுதியில் வல்லம், ஆலத்தம்பாடி, கொத்தமங்களம், திருத்துறைப்பூண்டி டவுன் ஆகியஇடங்களில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்து பின்னர் நிருபர்களிடம் உதவிஇயக்குநர் ஜான்சன் சார்லஸ்கூறியதாவது: ஆண்டுக்கு இருமுறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கால்நடைகளுக்கு கோமாரிதடுப்பூசிஇலவசமாக போடப்படுகிறது. கால்நடை வளர்ப்போர் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி பலனடையலாம். கோமாரி தடுப்பூசி போடவேண்டிய 1,20,245ல் இதுவரை 25,050 தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி கோட்டம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் 33 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளுக்குட்பட்ட கிராமங்கள்மற்றும் குக்கிராமங்களில் 16வது சுற்று கோமாரி நோய்தடுப்பூசி முகாம் கடந்த 15ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம்தேதிவரை 21 நாட்கள் நடைபெறுகிறது. முகாமில் பசு, எருமை, கன்றுகளுக்கு கோமாரி நோய்தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.