நீடாமங்கலம் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

நீடாமங்கலம்,மார்ச்20: நீடாமங்கலம் பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. நடைபெற உள்ள பாராளுமன்ற  தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் வாக்காளர்கள் ஓட்டிற்கு பணம் வாங்காமல் வாக்களிப்பது அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை காப்போம் போன்ற வாசகம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை பாராளு மன்ற தொகுதி அடங்கிய மன்னார்குடி சட்டமன்ற தொகுதி  நீடாமங்கலம் வட்டம் பெரியார்சிலை,அண்ணாசிலை,வடுவூர் ஆகிய இடங்களில் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.  நாடகத்தை நீடாமங்கலம் தாசில்தார் சீலா தொடங்கி வைத்தார். தேர்தல்துணை தாசில்தார் ஜெகதீசன்,வருவாய் ஆய்வாளர் கதிரவன்,கிராமநிர்வாக அலுவலர் துரைஆண்டனி, கிராம உதவியாளர்கள் ,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: