வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலங்குடி பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு பிரசுரங்கள்

ஆலங்குடி, மார்ச் 19: ஆலங்குடி பஸ் ஸ்டாண்ட், அரசமரம், வடகாடு முக்கம் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் குடும்பத்துடன் வாக்களிக்க வேண்டும், கண்ணியமான நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராதா ஜெயலெட்சுமி தொடங்கி வைத்தார். இதில் ஆலங்குடி தாசில்தார் கருப்பையா, தேர்தல் துணை தாசில்தார் ஜவஹருல்லா, வருவாய் ஆய்வாளர்கள் சாந்தி, வெண்ணிலா, ராணி வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டு பொதுமக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Related Stories: