இலுப்பூர், மார்ச் 19: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பெரியகுரும்பபட்டியில் கோயில் திருவிழாவையொட்டி கோயில் காளை மற்றும் காளைகள் சிறப்பு பூஜைக்கு பின் அருகே உள்ள திடல் பகுதியில் அவழ்த்து விடப்பட்டன. இதில் சேதுராப்பட்டி பகுதியிலிருந்து வந்த ஒரு காளையை வேலாங்கால்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் பிடித்ததாக தெரிகிறது. இதில் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் ஊர் காரர்கள் சமாதானம் செய்து பிரச்
னையை சரிசெய்தனர். இந்நிலையில் சேதுராப்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் ஊருக்கு பைக்கில் சென்றபோது சின்னகுரும்பபட்டி பகுதியில் ஒரு இளைஞர் இது தொடர்பாக அதன் வழியே சென்ற சேதுராப்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞரிடம் இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ளர். இது தொடர்பாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அதன் வழியே சென்ற சேதுராப்பட்டி பகுதியை சேர்ந்த சிலருக்கும், சின்னகுரும்பட்டியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது.