பொள்ளாச்சி குற்றவாளிகளை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பரங்குன்றம், மார்ச் 19: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பியதோடு, அந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மண் மூட்டைகளால் பாலம்சித்திரைத்திருவிழா துவங்கி முடியும் வரை முழுப்பணிகளையும் மதுரை மாநகராட்சி செய்து வருகிறது. இந்நிலையில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் ராட்சத இயந்திரங்களை கொண்டு மணல் அள்ளப்படுகிறது. இவற்றை மூட்டைகளாக கட்டி, வைகைக்கரைக்கும் அழகர் ஆற்றில் இறங்கும் கான்க்ரீட் தொட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் ராட்சத உருளைகள் மேல் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு அழகர் இறங்குவதற்கான பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

Related Stories: