வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை கொள்ளை

மயிலாடுதுறை, மார்ச் 19: மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீஸ் சரகம் எலந்தங்குடி ரயிலடித்தெருவை சேர்ந்தவர் சபீனாபேகம்(31) இவர் கடந்த 7ம் தேதி தனதுவீட்டை பூட்டிகொண்டு குடும்பத்தாருடன் சீர்காழியில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் வீட்டிற்குவந்த போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவை உடைத்து அதில் இருந்த 8 பவுன் நகைகள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories: