கொள்ளிடம், மார்ச் 19: ஆச்சாள்புரம்- மாதானம் சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்திலிருந்து மாதானம் வரை செல்லும் 3 கிலோ மீட்டர் தூர தார்சாலை மேம்படுத்தப்பட்டு 20 நாட்கள் ஆகிறது. ஆனால் சாலை நெடுகிலும் இருபுறங்களிலும் ஒரு அடி ஆழத்திற்கு உள்ள பள்ளத்தை மண்ணால் நிரப்பவில்லை. இதனால் சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களும், நடந்து செல்பவர்களும் சாலையோரம் செல்லும் போது தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.