விருத்தாசலம், மார்ச் 19: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகேயுள்ள கோவிலானூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் மகன் விஷ்ணுகுமார் (35), விவசாயி. இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் கண்ணுசாமி மகன் சுப்பிரமணியன் (40). விஷ்ணுகுமாருக்கு சொந்தமான மாடுகள் அவ்வப்போது சுப்பிரமணியனின் கொட்டகையில் சென்று அடைந்து வந்தது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் விஷ்ணுகுமாரின் மாடுகள் சுப்பிரமணியன் கொட்டகையில் சென்று அடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஞானமணி ஆகிய 2 பேரும் விஷ்ணுகுமாரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து விஷ்ணுகுமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், சுப்பிரமணியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுகுமாரின் தலையில் வெட்டியுள்ளார்.