திருமயம், மார்ச் 15: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், இலுப்பூர், அன்னவாசல், பொன்னமராவதி உள்ளிட்ட பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒரு காலத்தில் விவசாயத்தையே நம்பி இருந்தனர். அதேசமயம் அப்பகுதியில் தலையடிகள் அதிகம் இருந்ததால் அப்பகுதியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஜல்லிகல், முண்டு கல் உள்ளிட்டவைகள் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் காலப்போக்கில் பருவமழையின் அளவு குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனிடையே கட்டிடங்கள் கட்ட, சாலைகள் அமைக்க பறையில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் மவுசு அதிகமானது. இதனை பயன்படுத்தி கொண்ட அரசியல் பிரமுகர்கள் பறைகள் உள்ள விளைநிலங்கள், கொல்லைகாடுகள் விலை கொடுத்து வாங்கி அதிலிருந்த பாறைகளை வெட்டி எடுத்தனர். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்த நிலையில், வெளி மாவட்டம், மாநிலங்களுக்கும் அதிகளவு பறைகள் ஜல்லிகளாக லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.