திருப்புத்தூர், மார்ச் 15: திருப்புத்தூர் டாஸ்மாக் பாரில் நேற்று அனுமதி இல்லாமல் 100 மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். திருப்புத்தூர் சிவகங்கை ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகேயே பார் உள்ளது. நேற்று இந்த பாரில் அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.