ஆரணி, மார்ச் 14: ஆரணி அருகே திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை, பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(26). இவரது மனைவி பச்சையம்மாள். முருகன், ஆரணி அடுத்த சேவூரில் உள்ள தனியார் பட்டு மில்லில் வேலை செய்து வருகிறார். மேலும், அதே கிராமத்தை 17 வயது சிறுமியும் அதே மில்லில் வேலை செய்கிறார். ஒரே இடத்தில் வேலை செய்து வருவதாகல் சிறுமிக்கும், முருகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. விசாரித்ததில், அவரை முருகன் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தந்தை ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிந்து சிறுமியையும், அவரை கடத்திச்சென்றாக கூறப்படும் முருகனையும் தேடிவந்தனர்.