ஆலந்தூர்: மணப்பாக்கம் பிரதான சாலையை ஒட்டி ராணுவ மையத்துக்கு எதிரே உள்ள திரிகுளத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் தூர்ந்து, புதர்மண்டியுள்ளது. இதனால், குடிமகன்கள் அதனை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.
மணப்பாக்கம் 157வது வார்டுக்கு உட்பட்ட மணப்பாக்கம் பிரதான சாலையை ஒட்டி ராணுவ மையத்துக்கு எதிரே பழைமையான திரிகுளம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கிய இந்த குளத்தை உள்ளாட்சி அமைப்பினர் கண்டுகொள்ளாமல் விட்டதால் தூர்ந்து கட்டாந்தரையாகவும், புதர்மண்டியும் காட்சியளிக்கிறது.இதனால், ஆண்டுதோறும் மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது, இந்த இடத்தை குடிமகன்கள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருவதால், சுற்றுப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.