சிவகங்கை, மார்ச் 7: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை(மார்ச் 8) மகளிருக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் தெரிவித்ததாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் “வேலைவாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நாளை காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மகளிருக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.