பொன்னமராவதி, மார்ச் 7: பொன்னமராவதி பகுதியில் போர்வெல் நீரை கொண்டு கோடை சாகுபடியை விவசாயிகள் துவங்கி உள்ளனர். பொன்னமராவதி பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் வேலையில் போர்வெல் மூலம் ஒருசில இடங்களில் கோடை நடவுப்பணிகளும் நடைபெற்று வருகிறது. பொன்னமராவதி பகுதியில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் போதுமான அளவு தண்ணீரின்றி விவசாயம் செய்யாமல் விளை நிலங்களும் தரிசாக கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் அன்றாட பிழைப்பிற்கு சிரமப்பட்டு வருகின்றனர். குடும்பம் குடும்பமாக ஊரை விட்டு நகரங்களுக்கு பிழைப்பைத்தேடி செல்கின்றனர்.