காரைக்கால், மார்ச் 7: காரைக்கால் என்ஐடியில் நடைபெற்று வந்த 3 நாள் தொழில்நுட்ப விழா நிறைவு பெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் இயங்கிவரும் என்.ஐ.டியில், 3 நாள் தொழில் நுட்ப விழா நிறைவடைந்தது. 3 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் பல்துறை தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள், போட்டிகள் மற்றும் தொழில் நுட்பம் சாரா பல போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டு தங்களின் திறமையினை வெளிப்படுத்தினர்.