கரூர், மார்ச் 7: கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள துவக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் புலியூர் அருகே சின்னமநாயக்கப்பட்டி கிராமம் உள்ளளது. இந்த பகுதியில் பல்வேறு தெருக்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த துவக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருந்ததால் இங்கு பயின்று வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் அருகில் செயல்பட்டு வரும் மற்றொரு பள்ளி வளாகத்துக்குள் மாற்றப்பட்டுள்ளனர்.