பேராவூரணி, மார்ச் 6: கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, உட்பட பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை தமிழக அரசு வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் வருவாய் சரகத்தில் உள்ள மடத்திக்காடு, உப்புவிடுதி ஆகிய 2 கிராமங்களில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான தென்னை விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.