பிடிஆர் சிலைக்கு மாலை வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.28: பேங்க் ஆப் பரோடா, விஜயா பேங்க் மற்றும் தேனா பேங்க் ஆகிய 3 வங்கிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நேற்று மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலவெளிவீதியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி சுந்தரராஜன் தலைமை வகித்து, ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.

இதில் 18 பெண் பணியாளர்கள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: