குஜிலியம்பாறை, பிப். 28: குஜிலியம்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கி கிராமமக்கள் அசத்தியுள்ளனர்.
குஜிலியம்பாறை அருகே சேவகவுண்டனூரில் ஊராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 21 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியை, ஒரு உதவி ஆசிரியை என 2 பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து அவரவர் பங்களிப்புடன் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று கிராமமக்கள் சார்பில் பிளாஸ்டிக் நாற்காலிகள், கண்ணாடி, டிபன்பாக்ஸ், பாய், சில்வர்குடம், பென்சில்கள்,