வேடசந்தூரில் போதை இல்லா பாரதம் விழிப்புணர்வு பிரசாரம்

வேடசந்தூர், மே 18: வேடசந்தூர் ஆத்துமேட்டில் போதை இல்லா பாரதம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் போதை பொருட்களை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு போதை பொருட்களை தடை செய்துள்ளதாகவும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து அரசு வழங்கியுள்ள தொலைபேசி எண்கள் மூலம் புகார் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து வாகனங்களில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி பழனியாபிள்ளை, வேடசந்தூர் அனைத்து வர்த்தகர் சங்கத் தலைவர், குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி, வட்டார விவசாயிகள் சங்க செயலாளர் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வேடசந்தூரில் போதை இல்லா பாரதம் விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: