பாவை கல்வி நிறுவனங்களில் ராகவேந்திரா கல்லூரி மாணவர்கள்அரசு வாரியத்தேர்வில் சாதனை

குமாரபாளையம்,பிப்.26: பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான அரசு வாரியத்தேர்வில் குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மூன்றாமாண்டு கம்ப்யூட்டர் துறை மாணவி ராஜேஸ்வரி 99 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். முதலாமாண்டு மாணவி கீர்த்தனா 98 சதவீதம் மதிப்பெண்ணும், மூன்றாமாண்டு கம்ப்யூட்டர் துறை மாணவிகள் மணிமேகலை, சரஸ்வதி, இரண்டாமாண்டு கம்ப்யூட்டர் துறை மாணவி ராதிகா ஆகியோர் 97 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், 95 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பத்து மாணவர்களும், 90 சதவீதத்திற்கு மேல் 23 மாணவ, மாணவிகளும் மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். தனிப்பாடங்களில் 50 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த மாணவ, மாணவிகளை பாராட்டி ₹1.78 லட்சம் பரிசு தொகையினை கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: