ராசிபுரம்,பிப்.26: ராசிபுரம் நகர அதிமுக சார்பில், புதிய பஸ் நிலையம் பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்பி சுந்தரம் தலைமை வகித்தார். ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் நகர அதிமுக செயலாளரும், நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான பாலசுப்ரமணியம், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.