அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டய சான்று வழங்கல்

பண்ருட்டி,  பிப். 26: பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் அன்னை பாலிடெக்னிக்  கல்லூரியில் பட்டய சான்று வழங்கும் விழா நடந்தது. கல்லூரி செயலர் ரெக்சி  தலைமை தாங்கினார். முதல்வர் சவரிராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். விரிவுரையாளர்  சரண்யா வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக செயின்ட்ஆன்ஸ்  பொறியியல் கல்லூரி செயலர் டாக்டர் இயேசுதங்கம் கலந்துகொண்டு கடந்த  ஆண்டில் டிப்ளமோ முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டய சான்றுகளை வழங்கி  பாராட்டி பேசினார்.பொறியியல் கல்லூரி முதல்வர் ஆரோக்கியதாஸ் திருவள்ளுவர்  மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் சேரன், பண்ருட்டி அரசு மேனிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் பூவராகமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கடந்த கல்வி ஆண்டு  அரசு வாரிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்  வழங்கி பாராட்டினர். துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, துறை தலைவர்கள்  ஜேசுடெர்சி, அமலோற்பவம், ரமேஷ், முத்து, அவிலாதெரசி உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories: