கும்பகோணம் அருகே ைபக் மோதி விவசாயி பலி

கும்பகோணம்,பிப். 22: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த சித்தாடி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி சீனிவாசன் (45). இவர் கடந்த 20ம் தேதி கும்பகோணத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

மருதாநல்லூர் சாலையில் வந்தபோது எதிரே வந்த மற்றொரு பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த சீனிவாசனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

சேர்த்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். படுகாயமடைந்த மற்றொரு மொபட்டை ஓட்டி வந்தவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: