திருப்புத்தூர், பிப்.22: திருப்புத்தூர் அருகே நடுவிக்கோட்டை ரேஷன் கடையில் நேற்று விற்பனையாளர் பாமாயில் கடத்தியதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்புத்தூர் அருகேயுள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் ரேஷன் கடை விற்பனையாளராகப் பணிபுரிபவர் வயிரத்தாள்(45). இவர் கடை முடிந்து பெரிய பையுடன் வெளியே செல்வதைக் கண்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அதில் ரேஷன் பொருளான ஒரு லிட்டர் பாமாயில் 50 பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்டனர். உடனே கிராமத்தினர் திருப்புத்தூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் சாந்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.