மதுரை, பிப்.21: ஜெயலலிதா இருந்தால் கூட இதுபோன்ற கூட்டணி அமைந்திருக்காது என்று மதுரையில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். மதுரையில் பாண்டிகோயில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு அதிமுக சார்பில் எம்பி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை வகித்தார். இதில் மாநகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நடைபெற உள்ள தேர்தல் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ ேபசுகையில், ``ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சியாக அதிமுக உள்ளது.