ஜெயலலிதா இருந்தால் கூட இதுபோன்ற கூட்டணி அமைந்திருக்காது மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை, பிப்.21: ஜெயலலிதா இருந்தால் கூட இதுபோன்ற  கூட்டணி அமைந்திருக்காது என்று மதுரையில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். மதுரையில் பாண்டிகோயில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு அதிமுக சார்பில் எம்பி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை வகித்தார். இதில் மாநகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நடைபெற உள்ள தேர்தல் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ ேபசுகையில், ``ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சியாக  அதிமுக உள்ளது.

நடிகர்  ரஜினிகாந்த் தனது படங்கள் ஓடவேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறார். அதிமுக ஏழை, எளியவர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி, இன்று அவர்களுக்காகவே செயல்பட்டு  வருகிறது. எங்கள் கூட்டணி இயற்கையாகவே, இலை(இரட்டை இலை),  பூ(தாமரை), கனி(மாம்பழம்) அமைந்துள்ளது. ஜெயலலிதா இருந்தால் கூட இதுபோன்ற  கூட்டணி அமைந்திருக்காது என்றும், தற்போதே இக்கூட்டணி ெவற்றி பெற்று  விட்டதாகவும் மக்கள் பேசுகின்றனர்’’ என்றார். இக்கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: