வாஞ்சூர் சோதனை சாவடியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது

நாகை, பிப்.20:நாகை அருகே வாஞ்சூர் சோதனை சாவடியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த வாஞ்சூர் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 180 மி.லி. அளவு கொண்ட பாண்டி மதுப்பாட்டிகள் 10 பெட்டிகளில்  சுமார் 82 லிட்டர் மதுவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மதுபாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுப்பட்ட  திருபட்டனம் போலகத்தை சேர்ந்த ஜேம்ஸ் மகன் சாமுவேல் (26), போலகம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜா (32) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: