பெரம்பலூர், பிப். 15: கீழப்புலியூர் அருகே எடை குறைவாக காண்பித்ததால் தனியார் எடைமேடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கீழப்புலியூரில் தனியாருக்கு சொந்தமான எடை மேடை இயங்கி வருகிறது. இவர்களின் எடை மேடைக்கு நேற்று கீழ்புலியூரை சேர்ந்த கஞ்சமலை என்பவர் தனது டிப்பரில் 6,600 கிலோ மொத்த எடை கொண்ட மக்காச்சோளத்தை எடை போடுவதற்கு வந்துள்ளார். இங்கு வருவதற்கு முன்பு துருவத்தில் உள்ள கிரசரில் எடை போட்டு வந்துள்ளார். கீழப்புலியூர் தனியார் எடைமேடையில் எடை போடும்போது 6,470 கிலோ எடை வருவதாக கூறப்பட்டுள்ளது. இதில் 130 கிலோ எடை குறைவதாக தெரியவந்துள்ளது.