ரகளை வாலிபர் கைது

நெய்வேலி, பிப். 15:   நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21, அண்ணா தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன் மகன் சபரிநாதன் (36). இவர் 21ம் பிளாக்கில் உள்ள பேருந்து நிலையம் அருகே மது அருந்திக்கொண்டு சாலையில் செல்பவர்களை பார்த்து ஆபாசமாக பேசி இடையூறு செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தெர்மல் இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த் தேவி சம்பவ இடத்துக்கு வந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்றார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிந்து சபரிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: