சிதம்பரம், பிப். 15: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் பழைய கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராம மக்கள் வெள்ள நீரால் பாதிப்படைந்தனர். வீடுகள், பயிர்கள், தோட்டப்பயிர்கள் சேதமடைந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டன. அதில் கீழக்குண்டலப்பாடி, திட்டுக்காட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட 81 பேருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களுக்கான காப்பீட்டு தொகை யாருக்குமே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.