சீர்காழி, பிப்.8: சீர்காழி அருகே திட்டை சின்னதம்பி நகரில் ரூ.30 லட்சம் செலவில் பூங்காவுடன் கூடிய உடற்பயிற்சி பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசெல்வி தலைமை வகித்தார். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினாராணி, பொறியாளா;கள் முத்துகுமார், தாரா முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் அன்பரசன் வரவேற்றார். சீர்காழி எம்.எல்.ஏ பாரதி பூங்காவுடன் கூடிய உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ பூராசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் ராஜமாணிக்கம், போகர்ரவி, மாமல்லன், திருமாறன், ராஜ்மோகன், பாலா, ஓவர்சியர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒப்பந்தகாரர் மதியழகன் நன்றி கூறினார்.