ராசிபுரம், பிப்.6: ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. இதில் 23 மற்றும் 24வது வார்டில் கூலித்தொழிலாளர்களே அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில், பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து மாதாகோயில் தெருவில், நகராட்சி சார்பில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அப்பகுதி பொதுமக்களே பணம் வசூலித்து கழிப்பிடத்தை பராமரித்து வந்தனர். இதனிடையே, போதிய பராமரிப்பு இல்லாததால் அவ்வப்ேபாது கழிப்பறை பூட்டப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக நிரந்தரமாக கழிப்பிடத்தை பூட்டி வைத்துள்ளனர். இதனால் பெண்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த கழிப்பிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.