அண்ணாநகர், பிப். 5: விட்டுக்குள் சேர்க்க மறுத்ததால் கைக்குழந்தையுடன் கணவர் வீட்டு முன்பு மனைவி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் முகப்பேரில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை முகப்பேர் மேற்கு, சர்ச் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (35). திருநின்றவூரில் உள்ள தனது தந்தை நடத்தி வரும் செங்கல் சூளையை நிர்வகித்து வருகிறார். இவரது மனைவி பிரணிதா (32). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ரோகித் என்ற 8 மாத குழந்தை உள்ளது. தம்பதி இடையே தகராறு காரணமாக பிரணிதா அடிக்கடி கோபித்துக் கொண்டு அம்பத்தூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவார், என கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிரணிதா வழக்கம் போல் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று பிரணித்தாவை அவரது தந்தை பாலகண்ணன் சமாதானப்படுத்தி, கணவர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.