சாலையில் கிடந்த ரூ.60ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த பிளம்பர்

சீர்காழி, ஜன.30: சீர்காழி அருகே சாலையில் கிடந்த ரூ.60 ஆயிரம் பணத்தை எடுத்து போலீசில் ஒப்படைத்த பிளம்பரை அனைவரும் பாராட்டினர்.

சீர்காழி அருகே காளி பகுதியை சேர்ந்தவர் உத்திராபதி இவரது மகன் கோபு (35). இவர் நேற்று முன்தினம் மாலை மயிலாடுதுறை கிளைச் சிறைச்சாலை அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது சாலையில் கிடந்த ரூ.60 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு மயிலாடுதுறையில் பணி நிமித்தமாக வந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலுவிடம் 60 ஆயிரம் பணத்தை ஒப்படைத்தார். கீழே கிடந்த பணத்தை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்த கோபுவை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

Related Stories: