நாமக்கல், ஜன.29: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை செய்தபோது தவறி விழுந்து படுகாயமடைந்த அர்ச்சகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் கோட்டை சாலை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(54). அர்ச்சகரான இவர், நேற்று முன்தினம், நாமக்கல் ஆஞ்சநேயர் ேகாயிலில், சுவாமிக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தார். 18 அடி உயமுள்ள ஆஞ்சநேயருக்கு, 10 அடி உயரத்தில் உள்ள பலகை மீது ஏறி நின்று வெங்கடேசன் மாலை அணிவித்தார். அப்போது அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.