திருப்புத்தூர், ஜன. 22: கல்லல் ஒன்றியம் என்.வயிரவன்பட்டி ஊராட்சியில் 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அப்பகுதியினிர் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லல் ஒன்றியம் என். வயிரவன்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 2014-15ம் நிதியாண்டில் கிராம சேவை மையக்கட்டடம் ரூ.14.43 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. இந்த சேவை மையத்தின் மூலம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, முதல் பட்டதாரிச்சான்று மற்றும் பட்டா, சிட்டா நகல் உள்ளிட்டவைகள் பெறலாம்.