நெல்லிக்குப்பம், ஜன. 22: நெல்லிக்குப்பம் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதனால் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆகையால் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம், வைடிப்பாக்கம் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். இதில், அண்ணாநகரை சேர்ந்த மணி என்பவரது மகன் சம்பத்(20) என தெரியவந்தது.