ஆத்தூர், ஜன.11: சேலம் மாவட்டம் தலைவாசல் கிராமத்தில், திமுக சார்பில் தமிழகத்தின் அவலநிலைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நேரம் என்ற தலைப்பில் ஊராட்சி சபை கூட்டம் சிவன் கோயில் திடலில் ஒன்றிய பொறுப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளரும், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான வி.பி. துரைசாமி கலந்து கொண்டு கிராம மக்களிடம் கலந்துரையாடினார். அவர் பேசியதாவது; தமிழகத்திலும், மத்தியிலும் மக்களை ஏமாற்றும் அரசாங்கங்கள் நடந்து வருகின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இன்றைக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் லஞ்சமாக வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு தாராளமாக கடன்கள் வழங்கப்பட்டன. இதனால் பெண்கள் முன்னேற்றம் அடைந்தனர்.