பரமத்திவேலூர், ஜன.8: பரமத்திவேலூர் பேரூராட்சி சமுதாயக்கூட மண்டபத்தில் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி அசின்பானு, வழக்கறிஞர் கேசவன், வழக்கறிஞர் சங்க பொருளாளர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.