முத்துப்பேட்டை, ஜன.8: முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 717-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நேற்று அதிகாலை சுபுகு தொழுகைக்கு பிறகு சிறப்பு துஆ ஓதப்பட்டது. அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரை கந்தூரி விழா தொடக்கமாகவும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் நாதஸ்வரம் மற்றும் மங்கல இசை வாசிக்கப்பட்டு நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, இஸ்லாமிய இன்னிசை வாசிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியிலிருந்து புனித கொடியை பிரார்த்தனையுடன் தர்கா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்டது.