தேவகோட்டை, ஜன.4: தேவகோட்டை சிதம்பரநாதபுரம் பகுதி மக்கள் 2019 ஆங்கிலப் புத்தாண்டை குதூகலமாக கொண்டாடினர். புத்தாண்டு தினத்தன்று சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கற்கள் சேகரிப்பு, ஸ்லோ சைக்கிள் ரேஸ், பலூன் உடைத்தல், லெமன் அன் ஸ்பூன், பந்துடன் ஓட்ட, பன் சாப்பிடுதல், ஓட்டப்பந்தயம், செங்கல் நடை, பந்து பரிமாற்றுதல், சொல் கேட்டு ஓவியம் வரைதல், கயிறு இழுத்தல், ரொட்டி உண்ணுதல், கோலப்போட்டி, உறியடி, லக்கி கார்னர் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒரு நாள் முழுவதும் நடைபெற்றன. பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது.