மானாமதுரையில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

மானாமதுரை, ஜன. 4:  மானாமதுரையில் விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மானாமதுரை அண்ணாமலை நகரில் அண்ணாமலையார் விநாயகர் கோயில் உள்ளது. இங்கு கோயில் கடந்த அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மார்கழி மாத பூஜைக்காக கோயிலை திறக்க நிர்வாகி உலகசுந்தரம் வந்தார். அப்போது கோயில் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் திருடப்பட்டது தெரியவந்தது. உண்டியலில் கும்பாபிஷேகம், மண்டலாபிஷேகம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் சுமார் ஐயாயிரம் ரூபாய் வரை இருந்திருக்கலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஆனந்தவல்லிசோமநாதர் கோயில், எல்லைப்பிடாரியம்மன், சிப்காட் விநாயகர்கோயில், சிஎஸ்ஐ தேவலாய காணிக்கை பெட்டி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்தும் இதுவரை குற்றவாளிகளை பிடிக்க போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: