காரைக்கால், ஜன.4: மின்துறை ஊழியர்கள் பெறும் ஊதியத்தை குறைக்கும் எண்ணத்தை கைவிடகோரி காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மின்துறை ஊழியர்கள் இதுவரை பெற்றுக்கொண்டிருக்கும் ஊதியத்தை எக்காரணம் கொண்டும் குறைக்கக்கூடாது. ஒரு நபர் குழு அடிப்படையிலான ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும். நிர்வாகம் உறுதி அளித்தபடி அனைத்து காலி பணியிடங்களையும் உடனே பதவி உயர்வு மூலம் நிரப்பவேண்டும். தகுதியுள்ள விடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் உறுதி செய்யப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் மின் மீட்டர் ரீடிங் எடுக்கும் பணியினை தனியாருக்கு தாரைவார்க்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.