ராசிபுரம், டிச.28: ராசிபுரம் நகராட்சியில், கூட்டு குடிநீர் திட்ட குழாழில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாவதால், தண்ணீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், இடைப்பாடி தாலுகா பகுதிகள், மகுடஞ்சாவடி, காகாபாளையம், கண்டர்குலமாணிக்கம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் மற்றும் ராசிபுரம் நகராட்சியில் வசிக்கும் 10 லட்சம் மக்களுக்கு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் சேலம் மாவட்டம் புங்கனேரி, நைனாம்பட்டி, யூனியன்ஆபிஸ், நாச்சூர்கேட்டுக்கடை, ரங்கம்பாளையம் ஆகிய கிராமங்களில் 16 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணானது.