திருமங்கலம், டிச. 19: திருமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மொச்சை செடிகளில் பச்சாலை தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு காண வேளாண்துறை வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருமங்கலம் அருகே சாத்தங்குடி, புள்ளமுத்தூர், போல்நாயக்கன்பட்டி,திரளி, காண்டை, பச்சகோபன்பட்டி, பன்னீர்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மொச்சை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆடி, ஆவணி மாதங்களில் விதைப்பு செய்யப்படும் மொச்சை மார்கழி மாதத்தில் பூ பூத்து தை மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம்.