கோயில் திருவிழாவில் யானை தாக்கி பாகன் பலி

பாலக்காடு, டிச,18: பாலக்காடு அருகே கோயில் திருவிழாவின் போது யானை தாக்கியதில் பாகன் இறந்தார்.பாலக்காடு மாவட்டம் கொட்டப்பள்ளத்தைச் சேர்ந்தவர் செல்வன்(50). யானை பாகன்.  இவர் பாலக்காடு அருகேயுள்ள திருமூலங்கோடு லட்சுமணசுவாமி கோயிலில் நிறமாலை திருவிழாவிற்கு, திருச்சூரைச் சேர்ந்த ஜெயன் என்பவருக்கு சொந்தமான நாணு எழுத்தச்சன் என்கிற சங்கரநாராயணன் என்ற யானையை  அழைத்து சென்றுள்ளார்.  திருவிழாவில் பவனிவந்த நேரத்தில் மிரண்ட யானை செல்வனை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை போலீசார் மற்றும் விழா கமிட்டியினர் மீட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து செருப்புழச்சேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: