சிதம்பரம், டிச. 12: அண்ணாமலை பல்கலைக்
கழக பொறியியல் புலத்தில் ‘காற்றாலை மின்சக்தி இயக்கம் மற்றும் கட்டுப்பாடுகளில் உள்ள நவீன முறைகள்’ என்னும் தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம், சென்னை வெஸ்டாஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கை பொறியியல் புல முதல்வர் கிருஷ்ணமோகன் தொடங்கி வைத்து, ‘தொழிற்சாலை மற்றும் கல்லூரிகளை ஒருங்கிணைத்து நடத்தும் திட்டங்களை அதிகமான முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னை வெஸ்டாஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன பொறியாளர் கண்ணன் ராஜேந்திரன் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.