சிதம்பரம், டிச. 11: சிதம்பரம் அண்ணாமலைநகர் கேஆர்எம் நகர் 8வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி இந்திரா. இவர்களின் மகள் ரத்தினப்பிரியா (21). இவர் சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள தனியார் கல்லூரி யில் பிஎஸ்சி படித்து முடித்துள்ளார். இவர் தேர்வில் 3 பாடங்களில் அரியர் வைத்திருந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இந்திரா வெளியூர் புறப்பட்டுள்ளார். அப்போது மகளிடம் செல்போனை வைத்து விளையாடாதே, ஒழுங்காக படி என்று கூறிவிட்டு சென்றாராம். வீட்டில் பாண்டியனும், ரத்தினப்பிரியாவும் மட்டுமே இருந்துள்ளனர். மாலையில் இந்திரா கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு பஸ் நிலையத்துக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் பஸ் நிலையம் சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீடு திரும்பிய போது ரத்தினப்பிரியா இருந்த அறை உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.