இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

ஜலகண்டாபுரம், டிச.11: நங்கவள்ளி ஒன்றிய அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவும், குடிநீரை போதிய சுத்திகரிப்பு செய்து வழங்கவும், காய்ச்சல் பாதித்த பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்த வலியுறுத்தி, ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையை, தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், நரசிம்மன், ஜோதிபாசு, பெரமகவுண்டர், பார்த்திபன், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ், நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜீவானந்தம், நிருபன்குமார், வெங்கடேஷ், சந்தோஷ்குமார், அசோக், செல்வராஜ், கார்த்திக், சண்முகவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  

Related Stories: